Wednesday, November 2, 2011

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது.

சென்னை கோட்டூர்புரத்தில்  8 ஏக்கர் நிலப் பரப்பில் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. 



ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது.

12 இலட்சத்திற்கு மேற்பட்ட அறிவார்ந்த நூல்களையும்  1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன.

மாற்றுதிறனாளிகள் நூலகத்தில் எல்லா பகுதிகளுக்கும் சென்று பயன்படுத்தும் உள்கட்டமைப்பு கொண்டது என்பதும் இந்நூலகத்தின் சிறப்பு .


கடந்த சில மாதத்துக்கு முன்னர் வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான கிலாரியே பார்த்து பெருமைப்பட்ட நூலகம் அது.
 
ஆசியாவிலேயே
இரண்டாவது பெரிய நூலகம் மற்றும் மிகச்ச்ச்சிறந்த நூலகங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற பல  சிறப்புகொண்ட இந்த அண்ணா நூலகத்தை விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் என்றும் அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும் என  ஜெயலலிதா அறிவித்துள்ளார் . 

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. ஒரு நூலகத்துக்கான கட்டிட அமைப்புக்கும் ஒரு குழந்தைகள் நல மருத்துவமனைக்கான கட்டிட அமைப்புக்கும் இடையிலான வேறுபாடுகளை அறியாதவர் போல் ஜெயலலிதாவின் நடிப்பு அபாரம்.

நூலகத்தின் உள்கட்டமைப்பு அனைத்தும்  முற்றிலுமாக இடித்து தான் மருத்துவமனை அமைக்க முடியும். உணர்ச்சி வசப்படுவதால் எதையும் சாதிக்க முடியாது.

நவீனத்துவத்தை நோக்கிய அறிவார்ந்த நூல்களையும் படித்தால் தான் நன்றாக அறிவும் வளரும். என்று ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சருக்கு இது தெரியாதா?

மாறி வரும் கணினி  யுகத்துக்கு இணையாகவும், உலகத் தரத்திற்கு இணையாகவும் தமிழகத்தில் நூலகம் இல்லை என்ற குறையை நீக்கும் வகையிலும் கட்டப்பட்ட மிகப்பெரிய நூலகத்தை மருத்துவமனையாக மாற்றப் போகிறாராம்.


ஏன் மாற்றப் பார்கிறார் ? 2001 - 2006  ஜெயலலிதாவின் ஆட்சியின் போது  தலைமை செயலகம் கட்ட நினைத்த இடத்தில் நூலகத்தை உருவாக்கி கருணாநிதி தொடக்கி வைத்தார் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே . 

ஜெயலலிதாவால் கல்விச் சமூகத்திற்கு  எதிராக எடுக்கும்  இரண்டாவது  முட்டாள்தனமான முடிவு  இது.

முதலில் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்க்கிறேன் என்று  மூக்குடைபட்டது  ஜெயலலிதா ஞாபகத்தில் இருக்கவில்லை போலும் ?

மறுபடியுமா வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது ?


இது ஜெயலலிதாவின் பைத்தியக்காரத் தனத்தை உலகுக்கு காட்டுவதாக  பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஜெயலலிதா இதுபோன்ற  சிறுபிள்ளைத் தனமான செயற்பாடுகளை அடியோடு விட்டு விடுவது அவருக்கும் அவரது கட்சிக்கும் நன்மை .

ஜெயலலிதா இம்முறை அறிவார்ந்த கல்வியாளர்களின் எதிர்ப்பை நிச்சயம் சம்பாதிப்பார். கல்வியோடும் கல்வியாளர்களுக்கும் எதிரான  முடிவுகளை டுப்பதை ஜெயலலிதா கட்டாயம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே 
அனைவரின் எதிர்பார்ப்பு . 

                                                                          என்றும் உங்கள் ,
                                                              ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV . 



No comments:

Post a Comment