Monday, October 10, 2011

பாபநாசம் சிவன்


பாபநாசம் சிவன்
(செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 10, 1973)

 தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள போளகம் என்னும் ஊரில் ராமாமிருத ஐயர் - யோகாம்பாள் அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பாபநாசம் சிவன் பிறந்தார்.

இவரது இயற்பெயர் ராமசர்மன். பெற்றோர் இவரை ராமைய்யா என அழைத்தனர். பாபநாசம் சிவன் என்னும் பெயரானது இவருக்கு தஞ்சாவூரில் உள்ள கணபதி அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் இட்ட பெயர்.

1912 இல் பாபநாசம் சிவன் அதிகாலையில் (வைகறையில்) சிவன் கோயிலின் முன் நின்று அரும் பொன்னே மணியே என்று உருகி நாள்தோறும் பாடியதால் சிவபெருமானே கைலாசத்தில் இருந்து இளைஞர் வடிவம் கொண்டு இரங்கிவந்ததாகப் போற்றி புகழ்ந்ததின் காரணமாக இப்பெயர் பெற்றார்.

கர்நாடக சங்கீத மும்மூர்திகளுக்குப் பிறகு வந்த இசைப்பாடல்கள் இயற்றியவர்களில் பாபநாசம் சிவன் முக்கியமானவர் அவர் கர்நாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றி  உள்ளார்
 
பாபநாசம் சிவன் பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான கர்நாடக சங்கீத மெட்டுக்களை அமைத்துவிடும் திறனையும்  இவருக்கு கலைமகள் தந்திருந்ததாள் .

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜி.என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் முதலான புகழ்பெற்ற அந்தகால கர்நாடக சங்கீத வித்வான்கள் முதல் இன்றைய ஸுதா ரகுநாதன் ,உன்னி கிருஷ்ணன் , மஹதி  வரை அனைவரும் தங்கள் இசை நிகழ்ச்சிகளில் (கச்சேரிகளில்) பாபநாசம் சிவன் பாடல்களைப் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பாபநாசம் சிவன் அவர்கள் 10 ஆண்டுகள் உழைத்து 1952ல் வடமொழி சொற்கடல் (சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரா) என்னும் நூலை இயற்றினார்.

இவருடைய கடைசி ஆக்கங்களாக இராமாயணத்தைச் சுருக்கி 24 இராகங்களில் 24 பாடல்களாக ஸ்ரீ ராம சரித கீதம் என்னும் நூலையும்,. அதே போல காரைக்கால் அம்மையார் சரிதம் என்னும் நூலையும் இயற்றினார் .

பாபநாசம் சிவன் அவர்கள் கிருதி, வர்ணம், பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களிலும் இயற்றியுள்ளார். இவருடைய ஆக்கங்களை ஆறு தொகுப்புகளாக இவருடைய மகள் முனைவர் ருக்மணி ரமணி அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

 பாபநாசம் சிவன் அவர்கள் பெற்ற  
விருதுகளும்,பட்டங்களும்:

இந்திய அரசு பத்ம பூஷன் பட்டம் அளித்துப் பெருமை செய்தது.

தமிழ் இசைச் சங்கம் இசைப் பேரறிஞர் பட்டம் அளித்தது.

1950ல்  சங்கீத சாகித்ய கலா சிகாமணி
என்னும் பட்டத்தை இந்திய பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி அளித்தது.

 1971ல் மியூசிக் அக்காடமி சங்கீத கலாநிதி பட்டம் அளித்தது.






No comments:

Post a Comment